திருப்பரங்குன்றம் திருப்புகழ்


..... பாடல் .........


கனகந்திரள் கின்றபெ ருங்கிரி

     தனில்வந்துத கன்தகன் என்றிடு

          கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு ...... கதியோனே


கடமிஞ்சிஅ நந்தவி தம்புணர்

     கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு

          கரியின்றுணை என்றுபி றந்திடு ...... முருகோனே


பனகந்துயில் கின்றதி றம்புனை

     கடல்முன்புக டைந்தப ரம்பரர்

          படரும்புயல் என்றவர் அன்புகொள் ...... மருகோனே


பலதுன்பம்உழன்றுக லங்கிய

     சிறியன்புலை யன்கொலை யன்புரி

          பவமின்றுக ழிந்திட வந்தருள் ...... புரிவாயே


அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி

     புரமுந்திரி வென்றிட இன்புடன்

          அழலுந்தந குந்திறல் கொண்டவர் ...... புதல்வோனே


அடல்வந்துமு ழங்கியி டும்பறை

     டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென

          அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட ...... வருசூரர்


மனமுந்தழல் சென்றிட அன்றவர்

     உடலுங்குட லுங்கிழி கொண்டிட

          மயில்வென்றனில் வந்தரு ளுங்கன ...... பெரியோனே


மதியுங்கதி ருந்தட வும்படி

     உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய

          வளமொன்றுப ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே

No comments:

அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து

 10.பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்.           பிறவி என்ற வாழ்க்கைக் கடலில் நீந்தி கடக்க முயல்பவர் இறைவனின் திருவடிய...